2013-09-25 16:33:07

கென்யா ஆயர்களுக்கு கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகள் அமைப்பின் ஆதரவு


செப்.25,2013. செப்டம்பர் 21, கடந்த சனிக்கிழமையன்று நைரோபி நகரில் Westgate வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதலை அடுத்து, கிழக்கு ஆப்ரிக்க ஆயர்கள் இணைந்து, கென்யா ஆயர்களுக்கு தங்கள் ஒருங்கிணைப்பையும், செபங்களையும் தெரிவித்து, மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கென்யா ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் John Njue அவர்களுக்கு, கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகள் அமைப்பின் தலைவர் பேராயர் Tarcisius Ziyaye அவர்கள் அனுப்பியுள்ள இம்மடலில், இத்தாக்குதலில் இறந்தோருக்குத் தங்கள் செபங்களையும், பாதிக்கப்பட்டோருக்கு தங்கள் ஆறுதலையும், ஒருங்கிணைப்பையும் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலில், இதுவரை, 69 பேர் இறந்துள்ளனர் என்றும், 175 பேர் காயமுற்றுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வர்த்தக வளாகத்திலிருந்து இராணுவத்தினரால் 1000க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.