2013-09-23 16:11:53

கென்யாவில் இஸ்லாமியரல்லாதோர் அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்


செப்.23,2013. கென்யாவின் தலைநகர் நய்ரோபியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்லாமியரல்லாதோர் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அரபு மொழி பேசாதவர்களும், இஸ்லாமியச் செபத்தை உச்சரிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் காணப்பட்டு, 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் காரணமாக 175 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வளாகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கென்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோசப் ஒலே லென்கூ கூறியுள்ளார்.
இத்தாக்குதலில் இந்தியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : XtianGlobe








All the contents on this site are copyrighted ©.