பேராயர் Oscar Romeroஅவர்கள், இங்கிலாந்தின்
Southwark பேராலயத்தில் கௌரவிக்கப்பட்டார்
செப்.19,2013. San Salvador உயர்மறைமாவட்டத்தில் பணியாற்றியபோது, கொல்லப்பட்ட பேராயர்
Oscar Romero அவர்கள், செப்டம்பர் 19, இவ்வியாழனன்று இங்கிலாந்தின் Southwark பேராலயத்தில்
கௌரவிக்கப்பட்டார். Southwark பேராயர் பீட்டர் ஸ்மித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில், பல்வேறு கிறிஸ்தவ சபையைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில்,
El Salvador நாட்டு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் 13 அடி உயரம் கொண்ட ஒரு தனித்துவம்
மிக்க சிலுவை திறந்துவைக்கப்பட்டது. இச்சிலுவையில், பேராயர் Romero அவர்கள் பயன்படுத்திய
தொப்பியும், அவர் கொல்லப்பட்ட வேளையில் அணிந்திருந்த பூசை உடையின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன. ஏழைகளைப்
பற்றி அடிக்கடி பேசிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் போலவே, குரலற்ற வறியோரின்
சார்பில் பேசிய பேராயர் Romero அவர்கள் விரைவில் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்படும்
நாளை எதிர்பாத்திருக்கிறோம் என்று Southwark புனித ஜார்ஜ் பேராலயத்தின் பொறுப்பாளர் Canon
John O'Toole அவர்கள் கூறினார்.