2013-09-19 16:54:22

பேராயர் Oscar Romero அவர்கள், இங்கிலாந்தின் Southwark பேராலயத்தில் கௌரவிக்கப்பட்டார்


செப்.19,2013. San Salvador உயர்மறைமாவட்டத்தில் பணியாற்றியபோது, கொல்லப்பட்ட பேராயர் Oscar Romero அவர்கள், செப்டம்பர் 19, இவ்வியாழனன்று இங்கிலாந்தின் Southwark பேராலயத்தில் கௌரவிக்கப்பட்டார்.
Southwark பேராயர் பீட்டர் ஸ்மித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு கிறிஸ்தவ சபையைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், El Salvador நாட்டு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் 13 அடி உயரம் கொண்ட ஒரு தனித்துவம் மிக்க சிலுவை திறந்துவைக்கப்பட்டது.
இச்சிலுவையில், பேராயர் Romero அவர்கள் பயன்படுத்திய தொப்பியும், அவர் கொல்லப்பட்ட வேளையில் அணிந்திருந்த பூசை உடையின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன.
ஏழைகளைப் பற்றி அடிக்கடி பேசிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் போலவே, குரலற்ற வறியோரின் சார்பில் பேசிய பேராயர் Romero அவர்கள் விரைவில் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்படும் நாளை எதிர்பாத்திருக்கிறோம் என்று Southwark புனித ஜார்ஜ் பேராலயத்தின் பொறுப்பாளர் Canon John O'Toole அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.