2013-09-16 16:20:43

புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பேராயத்தின் அதிகாரிகளுள் ஒருவராக இந்திய அருள்பணியாளர் நியமனம்


செப்.16,2013. இந்தியாவைச் சேர்ந்த அருள்பணி Paul Pallath அவர்களை, புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பேராயத்தின் அதிகாரிகளுள் ஒருவராக இத்திங்களன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதுநாள்வரை திருப்பீடத்தின் Rota Romana எனும் நீதித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவந்த அருள்பணி Paul Pallath அவர்கள், தற்போது, புனிதர் பட்ட நிலைகளுக்கெனதிருப்பேராயத்தில், பரிந்துரைக்கப்படும் இறையடியார்களின் சார்பில் வாதிடுபவர்களுள் ஒருவராக நியமிக்கப்ப்ட்டுள்ளார்.
1959ம் ஆண்டு கேரளாவின் பாளை மறைமாவட்டத்தில் பிறந்த அருள்பணி Paul Pallath அவர்கள், 1987ம் ஆண்டு அதே மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் 1995ம் ஆண்டு முதல் திருப்பீடத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.