2013-09-16 16:28:03

நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஆங்கிலிக்கன் பேராயர் விடுவிக்கப்பட்டுள்ளார்


செப்.16,2013. நைஜீரியாவில் ஒரு வாரத்திற்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட ஆங்கிலிக்கன் பேராயர் Ignatius Kattey விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்தது.
காவல்துறையின் நடவடிக்கை மூலமே அவர் விடுவிக்கப்பட்டதாகவும், அவரின் விடுதலைக்கென பிணையத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அறிவித்தார் நைஜீரிய காவல்துறையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் Angela Agabe.
இம்மாதம் ஆறாம்தேதி ஆங்கிலிக்கன் பேராயர் Ignatius அவர்களையும் அவர் மனைவி Beatrice அவர்களையும் கடத்திச்சென்றவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே அவர் மனைவியை விடுவித்ததுடன், ஒருவாரத்திற்குப்பின் பேராயரையும் தற்போது விடுவித்துள்ளனர்.

ஆதாரம் : AP








All the contents on this site are copyrighted ©.