செப்.16,2013. கடந்த சனிக்கிழமையன்று கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் Zanzibar தீவில்
அமிலம் வீசி தாக்கப்பட்டுள்ளது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அத்தீவின்
அரசுத்தலைவர். இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களைக்கண்டு நாம் தொடர்ந்து அச்சத்தில்
வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்ற அரசுத்தலைவர் Ali Mohammed Shein, இத்தகைய கோழைகளைத்
தனிமைப்படுத்த பொதுமக்களின் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவைப்படுகின்றது என்றார். அடையாளம்
தெரியாத சில மனிதர்களால் அமில வீச்சுக்கு உள்ளாக்கப்படட Zanzibarன் கத்தோலிக்க அருள்பணியாளர்
Amselmo Mwangambaவை மருத்துமனையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் அரசுத்தலைவர்.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட Zanzibarல் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
மொத்த மக்கள் தொகையில் 3 விழுக்காடேயாகும்.