2013-09-14 17:33:55

Jose Gabriel Brochero அவர்கள், முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சிக்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


செப்.14,2013. "நமக்கு அடுத்திருப்பவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே சிலவேளைகளில் நம்மால் வாழமுடியும், ஆனால், அது கிறிஸ்தவமல்ல" என்று இச்சனிக்கிழமையன்று தனது Twitter பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அயலார் மீது நாம் கொள்ளவேண்டிய அன்பின் முக்கியத்துவத்தைத் தன் Twitter பக்கத்தில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே நாளில் அர்ஜென்டினாவின் Corboda எனுமிடத்தில் இடம்பெற்ற Jose Gabriel Brochero அவர்கள், முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சிக்குத் தன் வாழ்த்துக்களையும் அனுப்பியுள்ளார்.
ஏழைகளிடையே மிகவும் ஏழையாக வாழ்ந்த Brochero அவர்கள், தன் பங்கு மக்களிடையே, அன்பு மற்றும் நம்பிக்கையின் எடுத்துக்காட்டாகவும், பிறரன்பு மற்றும் கருணையின் முழு வெளிப்பாடாகவும் இருந்தார் என்று, அர்ஜென்டீனா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Maria Arancedo அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து மடலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.