செப்.09,2013. 'நாம் ஒருபோதும் நம்பிக்கை இழக்கக்கூடாது. நாம் கேட்டுக்கொண்டிருந்தால்,
இறைவன் தன் அருளால் நம்மை நிரப்புவார்' என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும்
திருத்தந்தை பிரான்சிஸ், நம்பிக்கை இழக்காமல், தொடர்ந்து வேண்டிக்கொண்டிருக்க வேண்டியதன்
அவசியம் குறித்து இத்திங்கள் டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். 'ஒருவர் ஒருவருடனான
சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளின் பாதையை உறுதியான தீர்மானத்துடனும் மன உறுதியுடனும்
பின்பற்றுமாறு ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். அமைதிக்காகச் செபியுங்கள்', என பிறிதொரு
டுவிட்டர் செய்தியையும் இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.