2013-09-07 15:01:42

இத்தாலிய கத்தோலிக்க கழகச் சிறார் திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபம்


செப்.,07,2013. இத்தாலிய கத்தோலிக்க கழகத்தைச் சேர்ந்த சிறார் இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் தோட்டத்தில் கூடி திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபித்து தங்களது சிறிய சிந்தனைகளையும் திருத்தந்தைக்குத் தெரிவித்தனர்.
அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, நாங்கள் இந்தத் தோட்டத்திலிருந்துகொண்டு தங்களோடு சேர்ந்து அமைதிக்காகச் செபிக்கிறோம் என 12 வயதுச் சிறுமி அரியானா எழுதியிருக்கிறார்.
8 வயது லிண்டா, அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, இத்தாலி முழுவதிலிமிருந்து உரோம் வந்துள்ள சிறாருடன் இன்று நானும் சேர்ந்துள்ளேன், தாங்களும் இங்கு எங்களோடு வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என எழுதியிருக்கிறார்.
புனித பேதுரு கல்லறைக்குச் செபம் செய்ய வந்துள்ளேன், அமைதி வெற்றியடையும் என நம்புகிறேன் என 9 வயது மிக்கேலா எழுதியிருக்கிறார்.
இப்படி பல சிறார் எழுதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கொடுத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.