செப்.,07,2013. சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவச் செபிக்குமாறு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று ஆப்ரிக்காவிலுள்ள திருஅவைகள் செபம்
மற்றும் நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றன. Gabon நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விசுவாசிகள்
திருநற்கருணை ஆராதனை திருவழிபாடுகளில் பங்குகொண்டு, திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச்
செபிக்கின்றனர். தென்னாப்ரிக்காவில் ஆலயங்களில் மட்டுமல்லாமல், சமூகவலைத்தளங்கள் மற்றும்
வானொலி மூலமாகவும் செபிக்கப்படும்வேளை, கடும் இனவாதச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள மாலி
நாட்டில் திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் சிறப்பாக விசுவாசிகள் செபிக்கின்றனர். மேலும்,
உலகெங்கிலும் இருக்கின்ற இரானிய ஷியா இஸ்லாம் பிரிவினர், பாஹாய் பிரிவினர், கிறிஸ்தவர்கள்,
இன்னும், இந்தியாவில் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என உலகினர் அனைவரும் திருத்தந்தையின்
அமைதிக்கான கருத்துக்களுக்காகச் சிறப்பாகச் செபிக்கின்றனர்.