2013-09-06 16:09:36

வீட்டுப்பணியாளர் குறித்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது


செப்.,06,2013. உலகின் ஏறக்குறைய 5 கோடியே 30 இலட்சம் வீட்டுப்பணியாளர்களின் தொழில் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் ஐ.நா. ஒப்பந்தம் ஒன்று இவ்வியாழனன்று அமலுக்கு வந்துள்ளது.
ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தால் 2011ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 189 நாடுகளும் இவ்வியாழன் முதல் இதனைக் கடைப்பிடிக்கச் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வார விடுமுறை, வேலை நேரங்கள், ஊதியம் உட்பட தங்களின் அடிப்படை உரிமைகளைத் தொழிலாளர்கள் இனிமேல் வலியுறுத்திக் கேட்கலாம் என்றும், பொலிவியா, இத்தாலி, மொரீசியஸ், நிக்கராகுவா, பரகுவாய், பிலிப்பீன்ஸ், தென்னாப்ரிக்கா, உருகுவாய் ஆகிய நாடுகள் உடனடியாக இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துகின்றன என்றும் ILO நிறுவனம் கூறியது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.