திருத்தந்தை பிரான்சிஸ் : அமைதி நல்லது, இது ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிகிறது
செப்.,06,2013. அமைதி நல்லது, இது ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிகிறது. ஏனெனில் அமைதி
அனைத்து மனித சமுதாயத்துக்கும் உரியது, அமைதிக்காகச் செபிப்போம் என்று தனது டுவிட்டர்
பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். Pope Francis
@Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை
பிரான்சிஸ், அன்பு இளையோரே, உலகின் அமைதிக்காக என்னோடு சேர்ந்து செபியுங்கள் என்று மற்றுமொரு
செய்தியையும் இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார். மேலும், இவ்வியாழனன்று
தனது டுவிட்டரில், மிகக் குறைந்தவிலை கிறிஸ்தவம் என்று எதுவும் இல்லை, இயேசுவைப் பின்செல்லுதல்
என்பது, தீமையையும் தன்னலத்தையும் புறக்கணித்து, பேரலைகளை எதிர்த்து நீந்துவதாகும் என்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். சண்டையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழுவும் தனது
தனிப்பட்ட ஆதாயத்தில்மட்டும் முடங்கிவிடாமல் இருக்குமாறு எனது அனைத்துச் சக்தியுடன் கேட்பதாக
மற்றுமொரு செய்தியையும் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அமைதிக்காகச் செபிக்குமாறு
அனைவரையும் கேட்டுள்ளார்.