செப்.,06,2013. தலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர்
ஒருவர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிய வணிகரைத் திருமணம்
செய்துகொண்ட 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி (Sushmita Banerjee), Paktika மாநிலத்தின் Kharanaவில்
அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கி மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானில்
தனது வாழ்க்கை குறித்து காபூலிவாலாவின் வங்காள மனைவி என்ற பெயரில் இவர் எழுதிய நூலில்
அவர் தனது ஆப்கான் கணவர் ஜான்பாஸ் கானுடன் வாழ்ந்த வாழ்க்கையை வர்ணித்துள்ளார். கடந்த
1995ம் ஆண்டு ஆப்கானில் இருந்து தான் தப்பி வந்தது குறித்து சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய
அந்தப் புத்தகம் 2003ம் ஆண்டு இந்தியில் திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மிகவும்
விற்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது. அண்மையில்தான் தனது கணவருடன்
சேர்ந்து வாழ்வதற்காக ஆப்கானுக்கு மீண்டும் சென்றுள்ளார் பேனர்ஜி. அங்கே சையத் கமாலா
என்ற பெயரில் அறியப்படும் இவர், நலவாழ்வுப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள
பெண்களின் வாழ்க்கை குறித்த ஒலி-ஒளிப் பதிவுகளையும் தனது பணி நிமித்தம் இவர் செய்துள்ளார்.