திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் மத்தியில் வருவதன்மூலம் நம் வாழ்வை மாற்
செப்.,03,2013. இயேசு நம் மத்தியில் வருவதன்மூலம் நம் வாழ்வை மாற்றுகிறார். கடவுளே அன்பு,
அவர் வாக்குமாறாதவர், அவரே வாழ்வு, அவர் தம்மையே வழங்குபவர் என்பதை இயேசுவில் பார்க்கிறோம்
என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். அரபு உட்பட ஒன்பது ஐரோப்பிய மொழிகளில் தினமும் டுவிட்டரில் எழுதி வரும்
திருத்தந்தை பிரான்சிஸ், பிரிவினைகள் மற்றும் சண்டையால் துண்டாடப்பட்டுள்ள நமது சமுதாயத்தில்
நாம் அமைதியை விரும்புகிறோம் என்று இச்செவ்வாயன்று மற்றுமொரு செய்தியையும் எழுதியுள்ளார். மேலும்,
ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால் அவை எவ்வளவு துன்பங்களை, எவ்வளவு அழிவுகளை, எவ்வளவு வேதனைகளை
கொண்டுவருகின்றன என்று இத்திங்கள் மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். இன்னும், யூதர்களின் புத்தாண்டையொட்டி உலக யூதமத அவையினரை இத்திங்களன்று
சந்தித்த திருத்தந்தை, அனைத்து யூதர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதங்களுக்குள்
உரையாடல் அதிகரிக்கவும், தீவிரவாதம் அகலவும் வேண்டுமெனக் கூறினார் திருத்தந்தை.