2013-09-03 16:20:48

கர்தினால் கிரேசியஸ் : இலட்சக்கணக்கான இந்தியச் சிறார் திருத்தந்தையோடு செபத்தில் இணைந்திருப்பர்


செப்.,03,2013. சிரியாவிலும், மத்திய கிழக்குப் பகுதியிலும், உலகெங்கிலும் அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பத்துக்கு இணங்கி, இந்தியத் திருஅவை வருகிற சனிக்கிழமையன்று செபம் மற்றும் நோன்பைக் கடைப்பிடிக்கும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறினார்.
இந்தியாவின் ஏறக்குறைய 20 இலட்சம் கத்தோலிக்கரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தோழமையுணர்வு கொண்டு இம்மாதம் 7ம் தேதியை செபத்திலும் நோன்பிலும் செலவழிப்பார்கள் என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்.
வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருவிழாவுக்குத் தயாரிப்பாக நவநாள் பக்தி முயற்சிகள் நடைபெற்றுவரும் இந்நாள்களில், இந்தியச் சிறார் சிறப்பாகச் செபித்து வருவதாகவும், வருகிற சனிக்கிழமையன்று இன்னும் சிறப்பாகச் செபிப்பார்கள் எனவும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.