2013-08-31 15:27:26

புதிய திருப்பீடச் செயலர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி


ஆக.,31,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்மீது வைத்துள்ள அளவிடமுடியாத நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின்.
இறைவனின் அதிமிக மகிமைக்காகவும், திருஅவையின் நன்மைக்காகவும், மனித சமுதாயத்தின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் அவரோடு சேர்ந்து பணி செய்வதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பேராயர் பரோலின்.
மேலும், புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.