காணாமல்போனோரின் உரிமைகளுக்காகப் போராடுவோருக்குப் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும்,
ஐ.நா.வல்லுனர்கள்
ஆக.,31,2013. கட்டாயமாக காணாமல்போனோரின் உரிமைகளுக்காகப் போராடும் அவர்களின் உறவினர்களுக்கும்,
அரசு-சாரா குழுக்களுக்கும் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள்
வல்லுனர்கள் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட காணாமல்போனோரின்
அனைத்துலக நாள் நிகழ்வின்போது இவ்வாறு அக்குழு பரிந்துரைத்தது. கட்டாயமாக காணாமல்போனோரின்
உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் அவர்களின் உறவினர்களும், அரசு-சாரா குழுக்களுமே என்றுரைத்துள்ள
அக்குழு, காணாமல்போனவர்கள் குறித்த உண்மை மற்றும் நீதியை வெளிப்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தி
வருகின்றனர் என்று கூறியது. காணாமல்போனவர்களின் நெருக்கடிநிலை குறித்து தேசிய மற்றும்
அனைத்துலக அளவில் விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்தி வருவதாக அக்குழு கூறியது.