2013-08-28 15:34:14

NATO நாடுகள், சிரியா மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை எதிர்ப்பு


ஆக.28,2013. கற்பனையான ஒரு குடியரசை அமைக்கும் வேகத்தில் NATO நாடுகள் சிரியாவின் மீது இராணுவ தலையீட்டை மேற்கொண்டால், பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகும் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை கவலை தெரிவித்துள்ளது.
சிரியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகளை முடிவுக்கு கொணர்வதற்கு NATO நாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்தரவின்றி, சிரியாவைத் தாக்கும் நோக்கத்தை வெளியிட்டிருப்பதற்கு இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபையின் சார்பில் ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அச்சபையின் தலைவர்களில் ஒருவரான Hilarion அவர்கள், உலகெங்கும் தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தை தாங்களாகவே எடுத்துக்கொள்ளும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேகத்தைக் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
தகுந்த காரணங்கள் இன்றி ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் இராணுவ தலையீட்டை மேற்கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடும், NATO நாடுகளும் சிரியாவிலும் அரசியல் நிலையற்ற வெற்றிடத்தை உருவாக்க முனைந்திருப்பது ஆபத்தானது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவர் Hilarion.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.