திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் ஒவ்வொருவருக்கும் மீட்பைத் திறக்கும் வாயில்
ஆக.,27,2013. இயேசு நம் ஒவ்வொருவருக்கும் மீட்பைத் திறக்கும் வாயில். தன்னலம், அக்கறையின்மை,
குறுகிய மனப்பான்மை ஆகியவற்றைப் புறந்தள்ளி நமது வாழ்வில் இயேசுவை அனுமதிப்போம் என்று
தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச்,
போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜோர்டன் அரசர் Abdallah
Husayn அவர்களை வருகிற வியாழனன்று வத்திக்கானில் சந்திக்கவுள்ளார் என, திருப்பீட பத்திரிகை
அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்தது. இச்சந்திப்பு, ஜோர்டன் அரசருக்கும், திருத்தந்தைக்கும்
இடையே வத்திக்கானில் நடைபெறும் முதல் சந்திப்பாக இருக்கும். முன்னாள் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்கள் 2009ம் ஆண்டில் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது அரசர்
Abdallah, Ammanல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்துள்ளார்.