2013-08-26 16:32:25

டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை மன்னிப்பதில் இறைவன் எந்நாளும் சோர்வடைவதில்லை


ஆக.26,2013. கடவுளிடம் மன்னிப்பு கேட்க அஞ்சவேண்டாம். நம்மை மன்னிப்பதில் அவர் எந்நாளும் சோர்வடைவதில்லை. இறைவன் களங்கமில்லாக் கருணையின் இருப்பிடம், என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்கள்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், களங்கமில்லாக் கருணையின் இருப்பிடமாக இருக்கும் இறைவனிடம் நாம் மன்னிப்பு கேட்க அஞ்ச வேண்டியதில்லை என எழுதியுள்ளார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.