2013-08-24 15:45:34

வருகிற செப்டம்பரில் உரோமில் புலம்பெயர்ந்தோர் மையத்தைப் பார்வையிடுவார் திருத்தந்தை பிரான்சிஸ்


ஆக.,24,2013. உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும் புலம்பெயர்ந்தோர் மையத்தை வருகிற செப்டம்பரில் பார்வையிடவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமில் இயேசு சபையினரின் தாய் ஆலயமான ஜேசு ஆலயத்துக்குப் பின்புறத்திலுள்ள Astalli புலம்பெயர்ந்தோர் மையத்துக்கு வருகிற செப்டம்பர் 10ம் தேதி பிற்பகலில் செல்லவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மையத்தில் புலம்பெயர்ந்தோர்க்கு கடந்த 13 ஆண்டுகளாகத் தன்னார்வப் பணியாளர்களின் உதவியுடன் இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்வையிட வேண்டுமென்று கடந்த ஏப்ரலில் அம்மையத் தலைவர் அருள்பணி Giovanni La Manna விடுத்த அழைப்பை ஏற்று வருகிற செப்டம்பர் 10ம் தேதியன்று அங்குச் செல்கிறார் அவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.