பாகிஸ்தான் பேராயர் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூண்டுதலின் விலைமதிப்பில்லா ஊற்றாக
இருக்கிறார்
ஆக.,23,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாழ்மைப் பண்பு, விலைமதிப்பில்லாத் தூண்டுகோலாக
நம் அனைவருக்கும் இருக்கின்றது என்று, பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம்
கூறினார் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ். "Jesus Youth Pakistan"(JYP) என்ற கத்தோலிக்க
இளையோர் கழகம், கராச்சியின் Notre Dame நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த, “சமூக மாற்றம்”
குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் கூட்ஸ், ஒருவர் சமூக மாற்றத்தில் உண்மையாகவே
அக்கறை கொண்டிருந்தால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்வுமுறையை அவர் உன்னிப்பாய்க்
கவனித்து வரவேண்டுமென்று கூறினார். பட்டதாரிகள், பல்வேறு தொழில்புரிவோர், அரசியல்
தலைவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில் பேசிய பேராயர் கூட்ஸ்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சக்தி, அரசியல் சார்ந்தது அல்ல, மாறாக, அன்பும் சேவையும்
சார்ந்தது என்று தெரிவித்தார்.