எர்ணாகுளம்-அங்கமலி சீரோ மலபார் உயர்மறைமாவட்டத்துக்குப் புதிய துணை ஆயர்
ஆக.,23,2013. கேரளாவின் எர்ணாகுளம்-அங்கமலி சீரோ-மலபார் உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை
ஆயராக அருள்பணி Jose Puthenveettil அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்குத் தனது ஒப்புதலை
வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்அனுமதியுடன்
கேரளாவின் புனித தாமஸ் மலையில் கூடிய சீரோ-மலபார் வழிபாட்டுமுறை பேரவை, அருள்பணி Jose
Puthenveettil அவர்களை, எர்ணாகுளம்-அங்கமலி சீரோ-மலபார் உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை
ஆயராகத் தேர்ந்தெடுத்துள்ளது. 1961ம் ஆண்டு கேரளாவின் Edappally பிறந்த புதிய துணை
ஆயர் Puthenveettil, 1987ம் ஆண்டில் குருவானார். பெல்ஜியத்தில் இறையியலில் முனைவர் பட்டம்
பெற்றுள்ள இவர், Vadavathoor குருத்துவக் கல்லூரியில் பத்தாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
திருஅவை சட்டப்படி, கீழை வழிபாட்டுமுறைகளின் பேரவைகள் அந்தந்தத் திருஅவைகளின் ஆயர்களைத்
தேர்வு செய்கின்றன. இதற்கு திருத்தந்தை ஒப்புதல் அளிக்கிறார்.