2013-08-22 15:52:16

பூமியின் தெற்கு கோளத்தில் உள்ள நாடுகள் மத்தியில் கூட்டுறவு அதிகமாகவேண்டும் - FAOவின் இயக்குனர்


ஆக.22,2013. பூமியின் தெற்கு கோளத்தில் உள்ள நாடுகளுக்கிடையே வேளாண்மையில் கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது, வளரும் நாடுகளுக்கு நன்மை விளைவிக்கும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 20, இச்செவ்வாய் முதல் 23, இவ்வெள்ளி முடிய அர்ஜென்டினா நாட்டின் Buenos Aires நகரில் சஹாரா நாடுகள் மற்றும் அர்ஜென்டினா நாட்டின் வேளாண்மை அமைச்சர்கள் மத்தியில் கருத்தரங்கு ஒன்று நடைபெறுகிறது.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் José Graziano da Silva அவர்கள், இக்கருத்தரங்கில் உரையாற்றியபோது, பூமியின் தெற்கு கோளத்தில் உள்ள நாடுகள் மத்தியில் கூட்டுறவு அதிகமாகவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
FAO அமைப்பினால் 1996ம் ஆண்டு 'தெற்கு-தெற்கு கூட்டுறவு' (FAO’s South-South Cooperation initiative) என்ற முயற்சி துவக்கப்பட்டது. இதுவரை இம்முயற்சியில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.