2013-08-22 15:48:03

ஆகஸ்ட் 22, அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா கொண்டாடப்படும் - Luxor ஆயர் Zakaria


ஆக.22,2013. வன்முறையைத் தூண்டிவந்த ஒரு சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதையடுத்து, எகிப்தின் Luxor பகுதியில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும், எனவே, ஆகஸ்ட் 22, இவ்வியாழனன்று அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா கொண்டாடப்படும் என்றும் எகிப்தின் ஆயர் ஒருவர் கூறினார்.
ஜூலியன் நாள்காட்டியின்படி ஆகஸ்ட் 22 கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா இவ்வாண்டு கொண்டாடப்படாது என்று இரு நாட்களுக்கு முன் அறிவித்த Luxor ஆயர் Youhannes Zakaria அவர்கள், பாதுகாப்பு நிலைமை சற்று முன்னேறியுள்ளதால், இவ்விழா எளிமையான வகையில் கொண்டாடப்படும் என்று Fides செய்திக்கு அளித்த குறிப்பில் கூறியுள்ளார்.
எகிப்தில் அமைதி திரும்பும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்து வரும் விண்ணப்பங்களைக் கேட்டு, பல நாடுகளிலிருந்தும் ஆயர்கள் தன்னை தொலைபேசியில் அழைத்து, தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவது தங்களுக்கு மிகுந்த வலிமையைத் தந்துள்ளது என்று ஆயர் Zakaria கூறினார்.
எகிப்தில் வாழும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒன்றித்து வாழ்வதையே விரும்புகின்றனர் என்றும் ஆயர் Zakaria தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.