2013-08-21 16:33:56

எகிப்தின் Luxorல் மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர் - ஆயர் Zakaria


ஆக.21,2013. எகிப்தில் ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா, இவ்வாண்டு பாதுகாப்புக் கருதி கொண்டாடப்படப் போவதில்லை என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 16ம் தேதி முதல் Luxorல் உள்ள தன் இல்லத்தில் காவல்துறையாலும், இராணுவத்தாலும் பாதுக்காக்கப்பட்டு வரும் காப்டிக் கத்தோலிக்க வழிபாட்டு முறை ஆயர் Youhannes Zakaria அவர்கள் Fides செய்திக்கு அனுப்பியுள்ள ஒரு குறிப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசுத்தலைவர் Morsi அவர்களின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ள ஆயர் Zakaria அவர்கள், Luxor பகுதி, Cairo நகரைப் போல் பேராபத்திற்கு உள்ளாகவில்லையெனினும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்கின்றனர் என்று கூறினார்.
மேலும், வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல், கடைகள் எதுவும் திறக்கபாடாத நிலை ஆகியவற்றால், இங்குள்ள மக்கள் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் ஆயர் Zakaria அவர்கள், தான் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.