ஆக.,16,2013. இலங்கையில் பாலர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, யுனிசெப்
என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனம் கூறியுள்ளது. பொருளாதார நிலைமைகள், போதியத் தெளிவின்மை
போன்றவற்றால் பாலர் திருமணங்கள் அதிகரிக்கின்றன என்று, இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி
Reza Hossaini தெரிவித்துள்ளார் இவ்வாறான திருமணங்களால், மனஉளைச்சல், நலவாழ்வுச்
சீர்கேடுகள், குழந்தை இறப்புகள் போன்றவை அதிகரிப்பதுடன், அவர்களுக்கு எதிரான பாலியல்
மற்றும் பிற வன்முறைகளும் அதிகரிக்கும் என்று Hossaini எச்சரித்துள்ளார். இந்நிலையில்
இது குறித்து நாட்டு மக்களுக்கு போதிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் Hossaini
பரிந்துரைத்துள்ளார். சிறுவயதில் திருமணம் முடித்த 71 பேர் மத்தியில் நடத்தப்பட்ட
ஆய்வில், அவர்களில் 30 விழுக்காட்டினர், 18 வயதுக்கு முன்னதாகவே கருத்தரித்திருந்தமை
தெரியவந்துள்ளது. உலகில் ஒவ்வொரு நாளும் 18 வயதுக்குட்பட்ட 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட
சிறார்த் திருமணங்கள் இடம்பெறுகின்றன.