2013-08-16 15:36:11

இலங்கையில் 2015ம் ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் வீடுகள்


ஆக.,16,2013. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கும் இந்தியாவின் திட்டம் வேகமாக முன்னேறி வருவதாக கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக உயர் அதிகாரி Y.K. Sinha கூறினார்.
கொழும்புவில் இடம்பெற்ற 67வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது இதனை அறிவித்தார் Sinha.
2012ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பல்வேறு நிலைகளில் உள்ளன என்றும், இவ்வாண்டு முடிவதற்குள் இவை முழுவதும் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் 2015ம் ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் Y.K. Sinha கூறினார்.

ஆதாரம் : ColomboPage







All the contents on this site are copyrighted ©.