2013-08-13 15:59:32

மரியின் விண்ணேற்பு விழா, கொரியாவில் அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது, செயோல் பேராயர்


ஆக.,13,2013. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை ஆகஸ்ட் 15ம் தேதியன்று இவ்வுலகம் சிறப்பிக்கும் அதேவேளை, கொரியத் திருஅவை விண்ணேற்பு அன்னைத் திருவிழாவை ஒரு சிறப்பான பக்தியுடன் கொண்டாடுகின்றது என்று செயோல் பேராயர் Andrew Yeom Soo-jung கூறியுள்ளார்.
விண்ணேற்பு அன்னை திருவிழாவை முன்னிட்டு தனது விசுவாசிகளுக்குச் செய்தி வெளியிட்டுள்ள பேராயர் Yeom, கொரிய மக்கள், ஆகஸ்ட் 15ம் தேதியன்று விண்ணேற்பு அன்னைத் திருவிழாவைக் கொண்டாடுவதோடு, கொரியாவில் ஜப்பானிய பேரரசின் ஆதிக்கமும், இரண்டாம் உலகப்போரும் முடிவடைந்ததைச் சிறப்பிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதியின் அரசியாம் மரியின் பரிந்துரை மூலமாகவே கொரியத் தீபகற்பத்துக்கு ஒப்புரவு ஏற்பட முடியும் என்றுரைக்கும் பேராயரின் செய்தி, கொரிய அரசுகள், புதிய மோதல்களைத் தவிர்க்க விரும்பினால், இரு கொரிய நாடுகளுக்கு இடையே குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு அவை முயற்சிகளை எடுக்கவேண்டுமென்று கேட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.