2013-08-12 16:42:56

மெக்சிகோ நகர் பேராலயம் கட்டப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி திருத்தந்தையின் வாழ்த்துச்செய்தி


ஆக.,12,2013. மெக்சிகோ நகர் பேராலயம் கட்டப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி அப்பெருமறைமாவட்ட பேராயர் கர்தினால் Norberto Rivera Carreraவுக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் 15ம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள இந்த 200ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம், ஆன்மீகத் தூண்டுதலுக்கும் மறைப்பணி அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு என திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
விசுவாசத்திலிருந்து வரும் நம்பிக்கையை வளர்ப்பதில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார், தன் செய்தியில் திருத்தந்தை.
நம் நம்பிக்கைகளை எவரும் திருடிவிட அனுமதிக்காமல், வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவோம் எனவும் தன் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, அன்பின் சாட்சிகளாக விளங்குவதற்கான பலத்தை திருநற்கருணையிலிருந்து பெற்றுச் செயல்படுவோம் எனவும் கூறியுள்ளார்.
மெக்சிகோ மக்களனைவரையும் குவாதலூப்பே அன்னைமரியாவிடம் ஒப்படைப்பதாக தன் செய்தியின் இறுதியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தனக்காகச் செபிக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.