2013ம் ஆண்டில் உலகில் 14 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை
ஆக.,10,2013. 2013ம் ஆண்டில் உலகில் இதுவரை 14 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்
என்று La Stampa நாளிதழின் Vatican Insider ஊடகச் செய்தி கூறுகின்றது. தென் அமெரிக்க
நாடான கொலம்பியாவில் நால்வர், மெக்சிகோவில் இருவர், பிரேசில், கானடா, ஹெய்ட்டி, இந்தியா,
இத்தாலி, சிரியா, டான்சானியா, வெனெசுவேலா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒருவர் என மொத்தம்
14 அருள்பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பெங்களூரு புனித பேதுரு
குருத்துவக் கல்லூரி அதிபர் அருள்பணி கே.ஜே.தாமஸ் இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி கொலை செய்யப்பட்டார்.