சிரியாவில் அமைதி இடம்பெறச் செபிக்குமாறு கர்தினால் Sandri அழைப்பு
ஆக.,03,2013. சிரியாவில் கடத்தப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணி Paolo Dall’Oglio குறித்த
விவரங்கள் எதுவும் தெரியாதிருக்கும்வேளை, அவர் குறித்த கவலையில் இருக்கும் இயேசு சபையினருக்குத்
தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருப்பீட கீழைரீதி பேராயத் தலைவர் கர்தினால்
Leonardo Sandri. சிரியாவின் இன்றைய நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால்
Sandri, சில மாதங்களுக்கு முன்னர் சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆயர்கள் மற்றும் இரு
அருள்பணியாளர்கள் குறித்த விபரங்கள் பற்றியும் இதுவரை எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிரியாவில் சண்டை முடியவும், அந்நாட்டிலும் மத்திய கிழக்குப் பகுதியிலும் அமைதி நிலைபெறவும்
அன்னைமரியிடம் உருக்கமாகச் செபிப்போம் என்றும் கர்தினாலின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.