2013-08-01 16:23:36

இளைமையில் கற்றுக்கொண்ட பழக்கங்கள் நம்மை நல்ல நிலையில் காப்பாற்றும் - மணிலா பேராயர் கர்தினால் Tagle


ஆக.01,2013. இளைமையிலேயே கிறிஸ்துவை நெருங்கி வர கற்றுக்கொண்டால், வாழ்வின் ஒரு சில வேளைகளில் வேறு யாரிடமும் நெருங்கிச் செல்ல முடியாதபோது, இறைவனிடம் நெருங்கிவர முடியும் என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் இளையோரிடம் கூறினார்.
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதி நாளையொட்டி, கடந்த ஞாயிறன்று, பிலிப்பின்ஸ் நாட்டின் Makati நகரில் நடைபெற்ற பிலிப்பின்ஸ் இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட கர்தினால் Tagle அவர்கள், இளையோர் செபத்தின் வழியாக இறைவனை நெருங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
5000க்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேசிய கர்தினால் Tagle அவர்கள், இளைமை என்ற நிலை கடந்து போனபிறகும், இளைமையில் கற்றுக் கொண்ட பழக்கங்கள் நம்மை நல்ல நிலையில் காப்பாற்றும் என்று கூறினார்.
ரியோ நகரிலிருந்து பல்லாயிரம் மைல்கள் தள்ளி நாம் இருந்தாலும், இறைவன் மீதும், அவரது நற்செய்தியின் மீதும் நாம் கொண்டுள்ள ஆர்வம் நம்மை ஒருங்கிணைக்கிறது என்று Parañaque ஆயர் Jesse Mercado அவர்கள், இக்கூட்டத்தில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.