ஜிம்பாபுவே நாட்டுக்காகச் செபிக்குமாறு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள்
ஜூலை,30,2013. ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் இப்புதனன்று நடைபெறும் தேர்தல்கள் வன்முறையின்றி
நடப்பதற்கு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் செபிக்குமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டுக்
கிறிஸ்தவத் தலைவர்கள். 2008ம் ஆண்டில் ஜிம்பாபுவே நாட்டை இரத்தக்காடாக்கிய வன்முறையைக்
குறிப்பிட்டு அந்நாட்டில் அனைத்து வனமுறைகளையும் தவிர்த்து நடக்குமாறு அரசியல் தலைவர்களைக்
வலியுறுத்தியுள்ளனர் அக்கிறிஸ்தவத் தலைவர்கள். ஜிம்பாபுவே நாட்டுக்கு, ஊழலும் தீமையும்
நிறைந்த ஆட்சியாளர்கள் அல்ல, மாறாக, கடவுள் பயமிக்க மற்றும் அமைதியை அன்புகூரும் தலைவர்கள்
தேவை என்றும் அத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ZCC என்ற ஜிம்பாபுவேயின் கிறிஸ்தவ சபைகள்
அமைப்பின் சார்பில் அந்நாட்டின் கிறிஸ்தவத் தலைவர்கள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில்
இவ்வாறு கேட்கப்பட்டுள்ளது.