வடகொரிய மனித உரிமை மீறல்களைத் தடுக்க ஒன்றிணையுமாறு கிறிஸ்தவ அமைப்பு அழைப்பு
ஜூலை,29,2013. கொரியப் போர் முடிவுற்று 60 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடகொரியாவின்
மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமுதாயம் கவனம் செலுத்தவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது
CSW எனப்படும் அனைத்துலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு. 30 இலட்சம் மக்களைப் பலிவாங்கி,
1953ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தென் மற்றும்
வடகொரிய நாடுகளுக்கு இடையே மோதல்கள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பதாக CSW எனப்படும்
கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது. தற்போது வடகொரியாவில், ஏறத்தாழ இரண்டு
இலட்சம் பேர், 5 அரசியல் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும்
இக்கிறிஸ்தவ அமைப்பு, இக்கைதிகளுள் 70 விழுக்காட்டினர் போதிய சத்துணவின்றி வாடுவதாகவும்
குற்றஞ்சாட்டுகிறது.