தூக்கத்தை கெடுக்கும் முழுநிலவு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்
ஜூலை,29,2013. சுவிஸ் நாட்டைச் சார்ந்த அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்,
நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் முழுநிலவுக்கு (பௌர்ணமி) உண்டு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பஸல் பல்கலைக்கழகம் உட்பட சில ஆய்வு நிறுவனங்கள் இணைந்து, புகைத்தலோ அல்லது மதுபானம்
அருந்தும் பழக்கமோ அற்ற 33 பேரின் தூக்கம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. இதில்
17 பேர் 21 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள், எஞ்சிய 16 பேரும் 57 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது. முழுநிலவு தோன்றியபோது இவர்கள் தமது தூக்கத்தில் இடர்களை
எதிர்நோக்கியுள்ளனர், அவர்கள் தூங்கிய பகுதியை இருட்டாக்கியபோது நன்றாக தூங்கியுள்ளனர். உடலின்
செயற்பாட்டை ஒழுங்குமுறையாக மேற்கொள்ள உதவும் மெலடோனின் எனும் ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படுவதாலேயே
தூக்கமின்மை ஏற்படுவதாக, ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.