ஜூலை,29,2013. இத்தாலியின் Ravenna-Cerviaவின் முன்னாள் பேராயர் கர்தினால் Ersilio Tonini
இஞ்ஞாயிறன்று தனது 99வது வயதில் இறையடி சேர்ந்ததைத் தொடர்ந்து, ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும்
இரங்கல்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். Ravenna-Cervia உயர்மறைமாவட்டத்தின்
பேராயர் Lorenzo Ghizzoniக்கு திருத்தந்தை அனுப்பியுள்ளஇந்தஇரங்கல் தந்தி, அந்தஉயர்மறைமாவட்டவிசுவாசிகளுடனும்,
அவர் பிறந்தPiacentinoபகுதி மற்றும் ஆயராக இருந்த Macerata-Tolentino மறைமாவட்ட விசுவாசிகளோடும்
ஆன்மீக ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும் கூறுகிறது. கர்தினால் Toniniயின் ஆன்ம இளைப்பாற்றிக்காக
செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ள திருத்தந்தை, கர்தினாலின் இறுதி காலத்தில் உதவிய மக்களுக்கு
தன் தனிப்பட்ட நன்றியையும் தெரிவித்துள்ளார். கர்தினால் Toniniயின் மரணத்தையொட்டி
திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயும் தன் இரங்கல்தந்தியை அனுப்பியுள்ளார்.
1914ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம்தேதி இத்தாலி நாட்டின் San Giorgio Piacentino பகுதியின்
Centovera எனுமிடத்தில் பிறந்தகர்தினால் Tonini, 1937ம் ஆண்டு குருவாகவும், 1969ல் ஆயராகவும்
அருள்பொழிவுச் செய்யப்பட்டார். 1994ல் தனது 80ம் வயதில் இவர் கர்தினாலாகஉயர்த்தப்பட்டார்.