ருவாண்டாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஐ.நா. 40 கோடி டாலர் உதவி
ஜூலை,27,2013. ருவாண்டா நாட்டில் ஏழ்மை, பசி மற்றும் நோயைக் குறைக்கும் திட்டங்களுக்கென
ஐந்தாண்டு கால அளவில் 40 கோடி டாலர்களை அந்நாட்டிற்கு வழங்க முன்வந்துள்ளது ஐ.நா. அமைப்பு. ஐ.நா.
நிறுவனம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ள இந்த 40 கோடி டாலர்களில், 27 கோடியே 60 இலட்சம்
டாலர்கள், நலஅதரவு, சத்துணவு, கல்வி, சுற்றுச்சூழல் தொடர்புடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு
செலவிடப்படும் எனவும், மீதித்தொகை பொருளாதார மற்றும் நிர்வாகத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.