2013-07-26 16:07:41

Diphu மறைமாவட்டம் புதிய ஆயரைப் பெறுகிறது


ஜூலை,26,2013. மேலும், இந்தியாவின் Diphu மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்திரு Paul Mattekattஐ இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Diphu மறைமாவட்ட குருவான இவர், 1961ம் ஆண்டு கேரளாவில் பிறந்து 1988ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
குருவானபின் உரோமை உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இறையியல் சட்டத்தில் உயர் கல்வி பயின்றுள்ளார் புதியஆயர் Mattekatt.
Diphu மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் John Moolachira, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Guwahati உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமைப் பேராயராக மாற்றப்பட்டத்திலிருந்து, இம்மறைமாவட்டம் ஆயரின்றி இருந்து வந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.