2013-07-23 15:47:48

‘இயேசு கிறிஸ்துவில் நம் நட்புணர்வை ஆழப்படுத்துபவைகளாக ரியோ நாட்கள் இருப்பதாக'


ஜூலை, 23,2013. இவ்வளவு சிறப்பு நிறைந்த உயர்வான வரவேற்பை வழங்கிய அனைவருக்கும், அரசு அதிகாரத்திலிருப்போருக்கும் நன்றியை உரைப்பதாக தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் 9 மொழிகளில் செய்திகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், செவ்வாயன்று பிரசில் நாட்டில் இருந்துகொண்டே இச்செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திங்கள் கிழமை முழுவதும் பயணம் செய்து உள்ளூர் நேரம் மாலை 4 மணியளவில் பிரேசில் நாட்டைச் சென்றடைந்த திருத்தந்தை, அந்நாளுக்குரிய செய்தியாக, 'இன்று நாம் ஒர் அற்புதமான வாரத்தை ரியோவில் துவக்குகின்றோம். இயேசு கிறிஸ்துவில் நம் நட்புணர்வை ஆழப்படுத்தும் நாட்களாக இவை இருப்பதாக' என்ற டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.