ஜூலை,23,2013. மெக்ஸிகோவின் Ensenada நகரில் கத்தோலிக்க குரு ஒருவர், அடையாளம் தெரியாத
மனிதர்களால் ஆயதங்களால் தாக்கப்பட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். மெக்ஸிகோவின்
Baja California பகுதியில் சகாய அன்னை கோவிலின் பங்கு குருவாக பணியாற்றி வந்த குரு Ignacio
Alvarez Cortez, இத்திங்களன்று கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் கொலைக்கான காரணம்
மற்றும் இவரைக் கொலை செய்தவர்கள் குறித்த விவரம் எதுவும் இன்னும் கிட்டவில்லை என காவல்துறை
அறிவித்துள்ளது. ஏற்கனவே மெக்ஸிகோ நாட்டில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் José Flores
Preciado என்ற குரு, அடித்தேக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.