இந்தியாவில் மூன்றாண்டுகளில் நான்கு இலட்சம் தற்கொலைகள்
ஜூலை,23,2013. இந்தியாவில், நான்கு நிமிடத்துக்கு, ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும்,
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில், நான்கு இலட்சத்து, 10,184 தற்கொலைகள்
இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி,
2010ம் ஆண்டில், இந்தியாவில், ஒரு இலட்சத்து, 34,599 பேரும், 2011ல், ஒரு இலட்சத்து,
35,585 பேரும், 2012ல், ஒரு இலட்சத்து, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் தற்கொலை செய்து
கொண்டுள்ளனர். உலக அளவில், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில், இந்தியா முதல்
இடத்தில் உள்ளது. இந்திய அளவில், மேற்கு வங்காளம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம்
இடத்திலும் உள்ளது. 2010ம் ஆண்டில், சென்னையில் மட்டும், 2,438 பேர் தற்கொலை செய்துள்ளனர்.