லூர்து நகரில் 69வது புதுமை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பு
ஜூலை,20,2013. பிரான்சின் லூர்து நகர் அனைனைமரியின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்று
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 69வது அற்புதமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள
இப்புதுமை, இத்தாலியப் பெண் Danila Castelli என்பவர் லூர்து திருத்தலக் குளியல் தொட்டியில்
மூழ்கி எழுந்த பின்னர் நடைபெற்றுள்ளது. 1946ம் ஆண்டு சனவரி 16ம் தேதி பிறந்த Danila
Castelli, 34வது வயதுவரை சாதாரண நலமான வாழ்வை வாழ்ந்து வந்தார். பின்னர் கடுமையான உயர்
இரத்த அழுத்தம், கருப்பை அறுவை சிகிச்சை, கணைய அறுவை சிகிச்சை என, பல உடல் பிரச்சனைகளை
எதிர்நோக்கினார். மருத்துவரான Danilaவின் கணவர் சிகிச்சைக்காக அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு
அவரை அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் Danila லூர்து நகர் செல்ல விரும்பி அங்குச்
சென்றனர். 1989ம் ஆண்டில் லூர்து திருத்தலக் குளியல் தொட்டியில் மூழ்கி எழுந்ததிலிருந்து
அவருக்கு நற்சுகம் கிடைக்கத் தொடங்கியது. Danilaவுக்கு நடைபெற்ற இப்புதுமையை, அவர்
சார்ந்துள்ள இத்தாலியின் பவியா மறைமாவட்ட ஆயர் ஜொவான்னி ஜூதிச்சி, 2013ம் ஆண்டு ஜூன்
20ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாரிஸ் மருத்துவக்குழு 2011ம் ஆண்டிலே
இப்புதுமை குறித்து அறிவித்துவிட்டது.