2013-07-20 15:52:30

மனிதர் நிலவில் காலடி வைத்த தினம் ஜூலை 20


ஜூலை,20,2013. ஜூலை 20, இச்சனிக்கிழமையன்று மனிதர், நிலவில் காலடி வைத்த தினம் நினைவுகூரப்பட்டது.
44 ஆண்டுகளுக்குமுன் இதே ஜூலை 20ம் நாளன்று முதன்முதலாக மனிதர் நிலவில் காலடி பதித்தார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ம் தேதி அப்பலோ 11 என்ற விண்கலம் நிலவுக்குப் பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலின்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இந்த விண்கலம் ஜூலை 20ம் தேதி இரவு 8.17 மணிக்கு நிலவில் இறங்கியது. விண்கலத்தில் பயணம் செய்த மூன்று வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதலில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்கவிட்டார். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையையும் படைத்தார். அண்மையில் இவர் மறைந்தார்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.