2013-07-20 15:47:15

2015ம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரம் Incheon


ஜூலை,20,2013. கொரியக் குடியரசின் Incheon நகரம், 2015ம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரம் என பன்னாட்டுப் புத்தக அச்சக வல்லுனர்கள் குழுவும், யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமும் அறிவித்துள்ளன.
நிறைய நல்ல தரமான புத்தகங்களைக் கொண்டிருத்தல், புத்தக வாசிப்பாளர்களை ஊக்குவித்தல், புத்தகங்கள் எளிதில் கிடைப்பதற்கு வழி அமைத்தல், Incheon குடிமக்களுக்கும் கொரியத் தீபகற்பத்தில் வாழும் அனைவருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்களை எழுதுதல் போன்றவற்றை வைத்து Incheon நகரம், 2015ம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டுக்கு பாங்காக், 2014ம் ஆண்டுக்கு Port Harcourt ஆகிய நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2003ம் ஆண்டில் புதுடெல்லி உலக புத்தகத் தலைநகரம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.