2013-07-19 16:07:55

நமீபியா கடும் வறட்சியால் துன்புறுகின்றது


ஜூலை,19,2013. ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதியில் வறட்சி மிகுந்த நாடான நமீபியா கடந்த 30 ஆண்டுகளில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் ஊட்டச்சத்துக்குறைவால் துன்புறுகின்றனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
கடந்த மே மாதத்தில் அறுவடை பொய்த்துவிட்டதால் அந்நாட்டு அரசுத்தலைவர் Hifkepunye Pohamba தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
பல விவசாயிகள் தங்களின் ஆடுமாடுகளை விற்கத் தொடங்கியுள்ளவேளை, அங்கோலா நாட்டிலிருந்து பசுக்கள் உணவு தேடி நமீபியாவுக்குள் வரத் தொடங்கியுள்ளன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
1990ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவிலிருந்து விடுதலையடைந்த நமீபியாவில் 20 இலட்சம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : Reuters







All the contents on this site are copyrighted ©.