ஜூலை,19,2013. காங்கோ குடியரசில் இரத்தம் சிந்தும் ஆயுதம் ஏந்திய சண்டையில் ஈடுபட்டுள்ள
அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிக்கான பணிகளில் உயிர்த்துடிப்புடன்
ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள். காங்கோ குடியரசின்
தலைவர்கள் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக உழைக்காமல் நாட்டு மக்களின் பொதுநலனில் அக்கறை
கொண்டு செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள். ருவாண்டாவுக்கும் உகாண்டாவுக்கும்
எல்லைப்புறத்திலுள்ள வட Kivu மாநிலத்தில் தாக்குதல்களை நடத்திவரும் புரட்சியாளர்களுக்குச்
சிறப்பான வேண்டுகோளை முன்வைத்துள்ள காங்கோ ஆயர்கள், இத்தாக்குதல்கள் இரண்டாவது காங்கோ
சண்டையாக உள்ளது என்று கவலையுடன் கூறியுள்ளனர். வன்முறை இறப்புக்களையும், படுகொலைகளையும்,
பாலியல் வன்செயல்களையும் தொடர்ந்து சந்தித்துவரும் வட Kivu மாநிலத்தில் கடந்த இருபது
ஆண்டுகளில் அறுபது இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். காங்கோவில் தொடர்ந்து
இடம்பெற்றுவரும் சண்டையால் பல இலட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும்,
முதல் காங்கோச் சண்டை பத்து ஆண்டுகளுக்குமுன் முடிவுற்றது.