உத்திராக்கண்ட் வெள்ள நிவாரணப் பணிகளில் Faridabad உயர்மறைமாவட்டம்
ஜூலை,18,2013. உத்திராக்கண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களை மீண்டும்
கட்டியெழுப்ப Faridabad சீரோ மலபார் வழிபாட்டு முறை உயர்மறைமாவட்டம் முடிவெடுத்துள்ளது. வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 12 அருள் பணியாளர்களையும் இன்னும் பல நூறு தன்னார்வத்
தொண்டர்களையும் அனுப்பியுள்ளதாக, சீரோ மலபார் பேராயர் Kuriakose Bharanikulangara, UCAN
செய்தியிடம் கூறினார். Bijnor மறைமாவட்டத்துடன் இணைந்து, Bijnor மாவட்டத்தில் உள்ள
Fathepur, Koharpur, Simlakala, Similie ஆகிய கிராமங்களில் பணிகள் துவுக்கப்பட்டுள்ளன
என்று பேராயர் தெரிவித்தார். ஜூலை 7ம் தேதி முதல் 14ம் தேதி முடிய மக்களிடமிருந்து
திரட்டப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான தொகை, இக்கிராமங்களுக்குத் தேவையான பொருட்களாக
அனுப்பப்பட்டுள்ளது என்று, இப்பணிகளை ஒருங்கிணைக்கும் அருள் பணியாளர் Varghese Palatty,
UCAN செய்தியிடம் கூறினார்.