ஜூலை,15,2013. கிறிஸ்தவருக்கு வாழ்வு என்பது ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வு அல்ல, மாறாக,
அழைப்பு மற்றும் தனிப்பட்ட அன்பின் கனி என தன் ஞாயிறு டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்வின் முக்கியத்துவம் மற்றும்
அதன் புனிதத்துவம் குறித்து தன் போதனைகளில் தொடர்ந்து எடுத்துரைத்து வரும் திருத்தந்தை,
தன் டுவிட்டர் பக்கத்தில் இஞ்ஞாயிறன்று 7 மொழிகளில் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.