பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் : அரசியல் அமைப்பு மாற்ற நடவடிக்கையில் கவனம் தேவை
ஜூலை,13,2013. பிலிப்பீன்சில் அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கும்
சட்ட அமைப்பாளர்கள் மிகுந்த முன்மதியுடன் செய்யப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்நாட்டு
ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma. அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படும் மாற்றங்கள்
பிலிப்பீன்ஸ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், இப்பணி மிகவும் கருத்தூன்றிச்
செய்யப்பட வேண்டிய விவகாரம் என்று அந்நாட்டின் Cebu பேராயர் Palma கூறினார். அரசியல்
அமைப்பில் மாற்றம் கொண்டுவருவது குறித்து இன்னும் நேரம் எடுத்து ஆய்வு செய்து அதை மிகுந்த
கவனத்துடன் செய்ய வேண்டியது முக்கியம் என்றும் பேராயர் Palma கூறினார். இவ்விவகாரம்
குறித்து, சார்பாகவும் எதிராகவும் பேசப்படும் கருத்துக்கள் குறித்து சிந்திக்க வேண்டும்
எனவும் பிலிப்பீன்ஸ் சட்ட அமைப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் Jose Palma.